செய்திகள்

அரக்கோணம் அருகே மின்கம்பத்தில் ஏறிய விசைத்தறி உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2017-04-20 08:00 GMT   |   Update On 2017-04-20 08:00 GMT
அரக்கோணம் அருகே மின்கம்பத்தில் ஏறிய விசைத்தறி உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள வளர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி (வயது 32), விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிவாஜி வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் அவர் தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்வயரை தட்டி சரிசெய்து உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மின்கம்பியில் சிக்கி தொங்கியவாறு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கம்பத்திற்கு செல்லும் மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின்கம்பியில் தொங்கி இறந்த சிவாஜியின் உடலை கீழே இறக்கினர்.

மற்றொரு சம்பவம்...

இதேபோல் அரக்கோணம் அருகே உள்ள பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவரது மனைவி மணிமேகலை (47). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் வளர்புரம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை செல்வராஜ் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிர் இழந்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Similar News