செய்திகள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் முற்றுகை: 20 பேர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முன்பு இன்று காலை மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த 20 பேர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். முற்றுகை குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முன்பு இன்று காலை மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த 20 பேர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். முற்றுகை குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.