செய்திகள்

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Published On 2017-03-29 15:22 GMT   |   Update On 2017-03-29 15:22 GMT
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
ஆம்பூர்:

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சோளூரில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இன்று மாலை இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொழிலாளி பாலாஜி, தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.

விஷவாயுவை சுவாசித்த பாலாஜி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வெளியில் தூக்கினர். ஆனால், அதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். இச்சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதேபோல் திருநெல்வேலி அருகே இன்று மாலை இடி தாக்கியதில் 2 பேர் பலியாகினர். கோபாலசமுத்திரத்தில் மாரியப்பன் என்பவரும், கீழதிடியூரில் கோமு என்பவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News