செய்திகள்

ஓட்டேரியில் தொழிலாளி கொலையில் வியாபாரி கைது

Published On 2017-02-26 09:51 GMT   |   Update On 2017-02-26 09:51 GMT
ஓட்டேரியில் தொழிலாளி கொலையில் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்:

ஓட்டேரி ஹைதர் கார்டனைச் சேர்ந்தவர் வினோத் (வயது25). பீரோ கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் வினோத் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் அந்த பகுதியில் தள்ளு வண்டியில் இளநீர் வியாபாரம் செய்த முத்துவேல் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

வினோத்தை முத்துவேல் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். உடனே முத்துவேல் அங்கிருந்து தப்பி ஓடி தலை மறைவானார்.

இந்த கொலை தொடர்பாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

முன் விரோதம் காரணமாக வினோத்தை முத்துவேல் கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் வினோத் கொலை தொடர்பாக தப்பி ஓடிய இளநீர் வியாபாரி முத்துவேலை போலீசார் தேடி வந்தனர்.

அவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரண்மனை என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று இன்று அதிகாலை முத்துவேலை கைது செய்தனர்.

Similar News