செய்திகள்
வாயில் காயத்துடன் திரியும் குட்டி யானை.

கவுண்டம்பாளையம் அருகே வெடிகுண்டு காயத்துடன் சுற்றித்திரியும் குட்டி யானை

Published On 2017-02-22 09:10 GMT   |   Update On 2017-02-22 09:10 GMT
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வெடிகுண்டு காயத்துடன் கடந்த சில நாட்களாக குட்டியானை சுற்றித்திரிகிறது.
கவுண்டம்பாளையம்:

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வெடிகுண்டு காயத்துடன் கடந்த சில நாட்களாக குட்டியானை சுற்றித்திரிகிறது.

வாயில் காயத்துடன் சுற்றும் குட்டியானை நேற்று தடாகம் பகுதிக்குள் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் குட்டியானை அனுவாவி சுப்பிரமணியம் மலைப்பகுதி வழியாக சென்று விட்டது.

இன்று காலை மருதூர் பகுதிக்கு அதே குட்டியானை 2 காட்டுயானைகளுடன் வந்தது. யானைகளை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. குட்டி யானை குறித்து பொதுமக்கள் கூறும்போது,

வாயில் பலத்த காயத்துடன் வந்த குட்டி யானையால் எதையும் சாப்பிட முடியவில்லை. மிகவும் சோர்வாக காணப்பட்டது. உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கூறினார்.


Similar News