செய்திகள்

முதல்வராக வருவது யார்?: பன்னீரா-எடப்பாடியா? தாராபுரத்தில் பணம் வைத்து சூதாட்டம்

Published On 2017-02-15 11:39 GMT   |   Update On 2017-02-15 11:39 GMT
முதல்- அமைச்சராக பன்னீர் செல்வம் வருவாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி வருவாரா? என்று தொண்டர்கள் பணம் வைத்து சூதாடி வருகிறார்கள்.

தாராபுரம்:

சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது முதல்வர் கனவு பகல் கனவாக போனது. இதனால் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் , எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தை எடப் பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யா சாகர் ராவை சந்தித்து கொடுத்துள்ளார்.

இதற்கிடையே முதல்- அமைச்சர் பன்னீர் செல்வத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சந்தித்தார். இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூட்டாக தெரிவித்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சசிகலா -பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்- அமைச்சராக பன்னீர் செல்வம் வருவாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி வருவாரா? என்று தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவாக பிரிந்து முதல்வராக பன்னீர் செல்வம் தான் மீண்டும் வருவார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார் என்றும் பணம் வைத்து சூதாடி வருகிறார்கள்.

சசிகலா- பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News