செய்திகள்

லாரி மீது பேருந்து மோதி 5 பேர் பரிதாப பலி

Published On 2017-01-21 12:49 GMT   |   Update On 2017-01-21 12:49 GMT
சேலம் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று பிற்பகலில் சென்றுள்ளது. பேருந்து பெருமாள்புரம் அருகே செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மேட்டூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பலியான பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News