செய்திகள்

ஜெயலலிதா மறைவால் பிளஸ்-1 மாணவி மயங்கி விழுந்து பலி

Published On 2016-12-08 05:53 GMT   |   Update On 2016-12-08 05:53 GMT
ஜெயலலிதா மறைவால் சாப்பிடாமல் வருத்தத்தில் இருந்த பிளஸ்-1 மாணவி மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவனியாபுரம்:

மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் மணிமேகலை (வயது 16). இவர் கீரைத்துறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். முதல்வரின் பல்வேறு திட்டங்களால் கவரப்பட்ட மணிமேகலை, ஜெயலலிதா மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.

கடந்த 5-ந் தேதிமுதல்வர் ஜெயலலிதா மறைவான செய்தி அறிந்த மணிமேகலை சோகத்துடன் காணப்பட்டார். இதனால் அவர் சாப்பிடாமல் முதல்வரின் இறுதி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனால் நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மணி மேகலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News