செய்திகள்

திருவள்ளூரில் பொது இடத்தில் மது அருந்திய 51 பேர் கைது

Published On 2016-10-22 06:00 GMT   |   Update On 2016-10-22 06:00 GMT
திருவள்ளூரில் பொது இடத்தில் மது அருந்திய 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

பொது இடத்தில் மது குடித்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று இரவு தனிப்படை போலீசார் திருவள்ளூர், மணவாளநகர், காக்களூர் உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது சாலையின் ஓரத்தில் மது அருந்திய 51 பேரை கைது செய்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 26 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Similar News