செய்திகள்
கோலி மற்றும் டி காக்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா

Published On 2019-09-18 13:35 GMT   |   Update On 2019-09-18 13:47 GMT
தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாட்டுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் தரம்சாலாவில் மோத இருந்த முதல் 20 ஓவர் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:

இந்திய வீரர்கள்:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், நவ்தீப் சைனி

தென் ஆப்பிரிக்க வீரர்கள்:

குயின்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹென்ரிக்ஸ், பவுமா, வான் டெர் டஸ்சென், டேவிட் மில்லர், பெலுக்வாயோ, பிரிட்டோரியஸ், ஃபார்டியுன், ரபாடா, அன்ரிச் நோர்ட்ச், டப்ரைஸ் ஷம்சி 
Tags:    

Similar News