செய்திகள்
தவான், ஹர்பஜன் சிங்

தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன் சிங்

Published On 2019-09-18 12:50 GMT   |   Update On 2019-09-18 12:50 GMT
விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக தவான் விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், காயத்தால் துரதிருஷ்டவசமாக வெளியேறினார்.

அதன்பின் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவை தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியை பொறுத்த வரை ரோகித் சர்மா அல்லது விராட் கோலியைத்தான் முன்னிலைப் படுத்துகிறார்கள். ஆனால் தவானின் பங்களிப்பும் இந்திய அணிக்கு மிகமிக முக்கியமானது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தவான் மற்றும் ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்கள். சிறந்த தொடக்க வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ரோகித் சர்மா அல்லது விராட் கோலியை போன்று தவானின் பங்களிப்பும் மிகமிக முக்கியமானது.

டி20 அல்லது 50 ஓவர் கிரிக்கெட் எதுவாக இருந்தாலும், ஷிகர் தவான் சிறந்த வீரர். என்னைப் பொறுத்த வரைக்கும் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்க தவானைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை. அவரது உடற்தகுதியில் கவனம் செலுத்தினால் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் அவரை யாரும் அசைக்க முடியாது’’ என்றார்.
Tags:    

Similar News