செய்திகள்
முகமது அமிர் சோயிப் அக்தர்

முகமது அமிர் டெஸ்ட் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும்: அக்தர் வேண்டுகோள்

Published On 2019-08-23 14:32 GMT   |   Update On 2019-08-23 14:32 GMT
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர், அவரது டெஸ்ட் ஓய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், முகமது அமிருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ‘‘அமிர் கண்டிப்பாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் பாகிஸ்தான் அணிக்கு தேவை. நாட்டிற்காக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஜாம்பவான் என்ற பெயரை எடுக்க முடியும். கவன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினால் யாரும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள்.

முகமது அமிர் முடிவை ஹசன் அலியும் பின்பற்றக்கூடும். வஹாப் ரியாஸ், ஜூனைத்கான் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News