செய்திகள்
துலீப் டிராபி

துலீப் டிராபி: இந்தியா ப்ளூ - க்ரீன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் டிரா

Published On 2019-08-20 13:48 GMT   |   Update On 2019-08-20 13:48 GMT
பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா ப்ளூ - இந்தியா க்ரீன் அணிகளுக்கு இடையிலான ஆட்ம் மழையால் டிரா ஆனது.
இந்தியா ப்ளூ, க்ரீன், ரெட் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட்  தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தியா ப்ளூ - இந்தியா க்ரீன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 17-ந்தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்தியா ப்ளூ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் அதன்பின் நான்கு நாட்களும் நடைபெறவில்லை.

இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆகஸ்ட் 23-ந்தேதி தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா ப்ளூ - இந்தியா ரெட் அணிகளும், ஆகஸ்ட் 29-ந்தேதி தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா க்ரீன் - இந்தியா ரெட் அணிகளும் விளையாடுகின்றன.

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 4-ந்தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
Tags:    

Similar News