செய்திகள்
பிவி சிந்து

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியோடு வெளியேறினார் பிவி சிந்து

Published On 2019-07-26 09:47 GMT   |   Update On 2019-07-26 15:31 GMT
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த அகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 18-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமகுச்சி பிவி சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது காலிறுதியில் தோற்கடித்துள்ளார்.



தொடர்ச்சியாக இரண்டு முறை பிவி சிந்து தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
Tags:    

Similar News