செய்திகள்

ஐசிசி-யின் முதல் பெண் போட்டி நடுவராகிறார் இந்திய வீராங்கனை ஜிஎஸ் லட்சுமி

Published On 2019-05-14 13:00 GMT   |   Update On 2019-05-14 13:00 GMT
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி, ஐசிசி-யின் முதல் போட்டி நடுவராக (Match Referee) பணியாற்ற இருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜிஎஸ் லட்சுமி. இவர் கடந்த 2008-2009-ல் உள்ளூர் கிரிக்கெட்டில் போட்டி நடுவராக பணியாற்றினார். பெண்களுக்கான மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், மூன்று டி20 கிரிக்கெட் தொடரிலும் போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் லட்சுமி பெயரை போட்டி நடுவர்கள் சர்வதேச குழுவில் ஐசிசி சேர்த்துள்ளது. வருகிற 27-ந்தேதி ஓமன் - நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதனால் மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.
Tags:    

Similar News