செய்திகள்

தொடக்க போட்டி வருமானத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்குகிறது சிஎஸ்கே

Published On 2019-03-21 09:23 GMT   |   Update On 2019-03-21 10:27 GMT
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் கிடைக்கும் டிக்கெட் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் #CSK
ஐபிஎல் 2019 சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23-ந்தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் கிடைக்கும் வருமானத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக வழங்கும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘‘இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உள்ள எங்கள் அணியின் கேப்டன் இதற்கான காசோலையை வழங்குவார்’’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags:    

Similar News