செய்திகள்

மோட்டார் கார் பந்தயம்: சென்னை வீரர் ராகுலுக்கு விருது

Published On 2019-02-26 09:18 GMT   |   Update On 2019-02-26 09:18 GMT
வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டு வீரருக்கான விருதை சென்னை இளம் வீரர் ராகுல் ரங்கசாமி பெற்றார்.
இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த ஆண்டின் வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டு வீரர் விருதை சென்னையை சேர்ந்த இளம் வீரர் ராகுல் ரங்கசாமி பெற்றார். அவர் 4 தேசிய பட்டம், எம்.ஆர்.எப்.- எப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய பந்தயத்திலும் வென்றுள்ளார்.

மோட்டார் வாகன பந்தய சங்க முன்னாள் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கவுரவ்கில், அர்மான் இப்ராகீம், அமித் ரஜித் கோஷ், அஸ்வின் நாயக் ஆகிய வீரர்களும் மிரா எர்டா, ஸ்னேகா, ஷிரியா லோசியா ஆகிய வீராங்கனைகளும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News