செய்திகள்

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்தியது ‘டிஸ்போர்ட்’

Published On 2019-02-17 10:20 GMT   |   Update On 2019-02-17 10:20 GMT
புல்வாமாவில் பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததையொட்டி பிஎஸ்எல் ஒளிபரப்பை நிறுத்தியது டிஸ்போர்ட் #PSL
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.

அதேத்தினத்தன்று ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆங்காங்கே அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் விளையாடாத நிலையிலும், டிஸ்போர்ட் இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கி கடந்த வருடத்தில் இருந்து இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் எதிரொலியாக டிஸ்போர்ட் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளது. 
Tags:    

Similar News