செய்திகள்

உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது: ராகுல் டிராவிட்

Published On 2019-02-01 11:10 GMT   |   Update On 2019-02-01 11:10 GMT
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #CWC2019
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று இந்திய ‘ஏ’ அணி பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

1999 உலகக்கோப்பையில் 461 ரன்கள் குவித்து முதல் இடம் பிடித்த ராகுல் டிராவிட், இதுகுறித்து கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அடுத்த சில மாதங்களில் உச்சத்தை அடைவோம் என நம்புகிறேன்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை 2019 தொடருடன் ஒப்பிடக்கூடாது. இங்கிலாந்தில் ஆடுகளங்கள் மிகவும்‘பிளாட்’டாக இருக்கும். இது மிகவும் அதிக ரன்கள் குவித்த உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\



இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடும்போது தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு உலகக்கோப்பையை காட்டிலும் போர்டில் அதிக ரன்கள் வரும். 1999-ல் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டு கூக்கப்புரா பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பீல்டிங் கட்டுப்பாடுகள் மாறுபட்டுள்ளது. ஆகையால் இரண்டு உலகக்கோப்பையையும் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடாது’’ என்றார்.
Tags:    

Similar News