செய்திகள்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து, சாய்னா, கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2019-01-24 13:53 GMT   |   Update On 2019-01-24 13:53 GMT
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து, சாய்னா, கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் நேர்செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்கா டுன்ஜங்கை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 23-21, 21-7 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் மற்றொரு இந்தோனேசிய வீராங்கனை பிட்டிரியானி பிட்ரியானியை 21-17, 21-15 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.



ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஜப்பானைச் சேர்ந்த கென்டா நிஷிமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News