செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு

Published On 2019-01-11 08:32 GMT   |   Update On 2019-01-11 08:32 GMT
இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் தொடரோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். #AUSOpen #AndyMurray
இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே. 3 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள அவர் வருகிற 14-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியோடு தான் ஓய்வு பெற முடிவு செய்து இருப்பததாக தெரிவித்தார். அப்போது அவர் கண் கலங்கினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிதான் என்று கடைசி தொடராக இருக்கும் என கருதுகிறேன். இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். எனது சொந்த நாட்டில் நடக்கும் விம்பிள்டன் போட்டியோடு ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால் நீண்ட காலமாக வலியால் அவதிப்படுகிறேன். அந்த வலியுடன் அடுத்த 5 மாதங்களுக்கு விளையாட முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி எனது கடைசி தொடராக இருக்கலாம் என்று கருதுகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News