செய்திகள்

ரஞ்சி டிராபி- தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் முதல் நாளில் 249/3- அக்‌ஷாத் ரெட்டி சதம்

Published On 2018-11-12 13:48 GMT   |   Update On 2018-11-12 13:48 GMT
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கெதிராக ஐதராபாத் முதல் நாளில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி சதம் அடித்தார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று இன்று தொடங்கியது. திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. டேன்மே அகர்வால், கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேன்மே அகர்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரோகித் ராயுடு 13 ரன்னிலும், ஹிமாலே அகர்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு அக்‌ஷாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அக்‌ஷாத் ரெட்டி சதம் அடிக்க சந்தீப் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அக்‌ஷாத் ரெட்டி 114 ரன்களுடனும், சந்தீப் 74 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு அணி சார்பில் விக்னேஷ், எம் முகமது, ரஹில் ஷா தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News