செய்திகள்
ரஞ்சி டிராபி- தமிழ்நாடு - மத்திய பிரதேசம் இடையிலான ஆட்டம் டிரா
ரஞ்சி டிராபி தொடரில் திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு - மத்திய பிரதேசம் இடையிலான ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. #RanjiTrophy
ரஞ்சி டிராபி முதல்தர கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. 3-வது வீரர் பதிடார் 196 ரன்கள் குவிக்க மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆனால் 157.4 ஓவர்கள் சந்தித்தது.
பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், பாபா இந்திரஜித் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 77.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், பாபா இந்திரஜித் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 77.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.