செய்திகள்

ரஞ்சி கோப்பை- தமிழக வீரர் முகமது ஹாட்ரிக்- மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவிப்பு

Published On 2018-11-02 13:01 GMT   |   Update On 2018-11-02 13:01 GMT
ரஞ்சி கோப்பையில் தமிழக வீரர் முகமது ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதேசமயம் மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவித்தது. #RanjiTrophy
இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள மத்திய பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் திண்டுக்கல்லில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆரியமான் பிர்லா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அங்கித் டேன் 4 ரன்னில் வெளியேறினார்.

3-வது வீரராக ராஜத் பதிடார் களம் இறங்கினார். இவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ராஜத் பதிடார் சதம் அடிக்க மத்திய பிரதேசம் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 சேர்த்திருந்தது. பதிடார் 110 ரன்னுடனும், எஸ் ஷர்மா ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஷர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பதிடார் இரட்டை சதத்தை நோக்கித் சென்றார். 142-வது ஓவரை தமிழகத்தின் எம் முகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டுபே 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

144-வது ஓவரை எம் முகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பதிடார் 196 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இரட்டை சதம் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த ஹிர்வானியை டக்அவுட்டில் வீழ்த்த, முகமது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.



மத்திய பிரதேசம் அணியின் ஸ்கோர் 360 ரன்னாக இருக்கும்போது பதிடார் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மத்திய பிரதேசம் 157.4 ஓவரில் 393 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

தமிழக அணி சார்பில் எம் முகமது, அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது நாள் ஆட்டம் முடியும்போது தமிழ்நாடு 2 ஓவரில் ரன்ஏதும் எடுக்கவில்லை. நாளை 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
Tags:    

Similar News