செய்திகள்
7-வது முறை 150-க்கு மேல், 2013-ல் இருந்து அதிகபட்ச ஸ்கோர்- ஹிட்மேன் சாதனை
மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 162 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். #INDvWI #RohitSharma
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி சூப்பர்மேனாக ஜொலிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 162 ரன்களை குவித்தார். இந்த தொடரில் அவர் 2-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் அவர் 152 ரன் எடுத்து இருந்தார்.
ஒட்டு மொத்தமாக ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 7-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தெண்டுல்கர் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தலா 5 முறையும், ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), ஜெயசூர்யா (இலங்கை), விராட் கோலி (இந்தியா) ஆகியோர் தலா 4 முறையும் 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர்.
162 ரன் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா தொடர்ந்து 6-வது ஆண்டாக ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி கடந்த பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 160 ரன் எடுத்து இருந்ததை அவர் தற்பேது முந்தி உள்ளார்.
ஒட்டு மொத்தமாக ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 7-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தெண்டுல்கர் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தலா 5 முறையும், ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), ஜெயசூர்யா (இலங்கை), விராட் கோலி (இந்தியா) ஆகியோர் தலா 4 முறையும் 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர்.
162 ரன் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா தொடர்ந்து 6-வது ஆண்டாக ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி கடந்த பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 160 ரன் எடுத்து இருந்ததை அவர் தற்பேது முந்தி உள்ளார்.