செய்திகள்

ஒரு இந்திய வீரருக்குக் கூட இடம் கொடுக்கவில்லை அலஸ்டைர் குக்

Published On 2018-09-06 15:33 GMT   |   Update On 2018-09-06 15:33 GMT
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அலஸ்டைர் குக்கின் 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. #alastaircook
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக், நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைப் படைத்திருக்கும் அலஸ்டைர் குக், தனக்கு பிடித்தமான 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார். அதில் ஒரு இந்திய வீரருக்குக் கூட அவர் இடம் கொடுக்கவில்லை.



அலஸ்டைர் குக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கிரஹாம் கூச் (கேப்டன்), 2. மேத்யூ ஹெய்டன், 3. பிரையன் லாரா, 4. ரிக்கி பாண்டிங், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. குமார் சங்ககரா, 7. கல்லீஸ், 8. முத்தையா முரளீதரன், 9. ஷேர்ன் வார்ன், 10.0 ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. மெக்ராத்.

இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில், 32 சதங்கள், 46 அரை சதங்களுடன் 12554 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 44.88 ஆகும்.
Tags:    

Similar News