செய்திகள்

பார்சிலோனா வீரர் ஜெரார்டு பிக்காய் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

Published On 2018-08-12 09:12 GMT   |   Update On 2018-08-12 09:12 GMT
பார்சிலோனா அணியின் பின்கள வீரரான ஜெரார்டு பிக்காய் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #Barcelona
ஸ்பெயின் கால்பந்து அணியின் பின்கள வீரர் ஜெரார்டு பிக்காய். இவர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வருகிறார். ஜூன் மற்றும் ஜூலை மாதம் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியது.

அந்த போட்டியில் பிக்காய் பந்தை தடுக்கும்போது பந்து கையில் பட்டதால் ரஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கால்பந்து விளையாட்டின் மீதமுள்ள காலத்தை பார்சிலோனா அணிக்காக செலவிட இருப்பதாக தெரிவித்துள்ளார். ஸ்பெயின் அணிக்காக மூன்று உலகக்கோப்பையில் விளையாடியுள்ள பிக்காய், 102 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
Tags:    

Similar News