செய்திகள்

டிஎன்பிஎல்- மதுரை பாந்தர்சுக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி

Published On 2018-07-13 17:15 GMT   |   Update On 2018-07-13 17:15 GMT
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மதுரை பாந்தர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL #SMPvDD
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 24 ரன்களும், தலைவன் சற்குணம் 26 ரன்களும், அருண் கார்த்திக் 61 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் ஷிஜித் சந்திரன் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. ஹரி நிஷாந்தும், ஜகதீசனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

ஹரி நிஷாந்த் 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் ஜகதீசனுடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஜகதீசன் 42 பந்துகளில் 68 ரன்களும், விவேக் 33 பந்துகளில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags:    

Similar News