செய்திகள்

மெஸ்சியை போல் ரொனால்டோ செய்த தவறலால் போர்ச்சுகல் வெற்றி பறிபோனது

Published On 2018-06-26 10:53 GMT   |   Update On 2018-06-26 10:53 GMT
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறிவிட்டதால் போர்ச்சுகல் வெற்றி வாய்ப்பு பரிதாபமாக பறிபோனது. #WorldCup #RonaldoCR7
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்றிரவு மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். அவர் கோல் அடித்து இருந்தால் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து ஹாரி கேனை (இங்கிலாந்து) தொட்டு இருப்பார்.

ஏற்கனவே அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டியை தவற விட்டு இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ முரட்டுத் தனத்தில் ஈடபட்டார். ஈரான் வீரரின் முகத்தை கையால் குத்தியதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. #WorldCup #WorldCupRussia2018 #Portugal #RonaldoCR7
Tags:    

Similar News