search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை கால்பந்து"

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பிரான்சை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்ல கேப்டனும், நட்சத்திர வீரரு மான லியோனல் மெஸ்சி முக்கிய பங்கு வகித்தார். அவர் 7 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அதோடு 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்து உள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் 35 வயதான மெஸ்சியின் கனவு நனவாகியுள்ளது. 5-வது உலக கோப்பையில் தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இதற்கு முன்பு 2014-ல் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி யுடன் தோற்று கோப்பையை இழந்தார். தற்போது இறுதி போட்டியில் பிரான்சை தோற்கடித்து மெஸ்சி தனது உலக கோப்பை கனவை நனவாக்கி கொண்டார்.

    அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப் பையை வென்றது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டு களில் அந்த அணி சாம்பி யன் பட்டம் பெற்று இருந்தது. மரடோனா வழி யில் மெஸ்சி தன்னை இணைத்துக் கொண்டார். உலக கோப்பையை வென்ற தன் மூலம் கால்பந்தின் அனைத்துக் கால கட்டத் துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை மெஸ்சி நிரூபித்து விட்டார்.

    36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தலைநகர் பியுனஸ் அயர்சில் ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் நாட்டு கால்பந்து அணியின் வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

    அங்குள்ள மைய சதுக்கத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் தலைகள் தெரியும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர். தங்கள் நாட்டுக்குரிய பாடலை பாடியவாறு உற்சாகம் அடைந்தனர். மெஸ்சி, மெஸ்சி என்று கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணி தனது நாட்டுக்கு திரும்பியது. பாரீஸ் நகரில் கால்பந்து வீரர்களை அந்நாட்டு ரசி கர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கும், அதிக கோல்களை (8) அடித்து தங்க ஷூ வென்ற வருமான எம்பாப்வேயை வாழ்த்தி ரசிகர்கள் கோஷ மிட்டனர்.

    • ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார்.
    • இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது.

    கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது.

    இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.

    இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். ரொனால்டோவை பார்த்து அந்த வீரர் 'சீக்கிரம் போ' என கத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ "நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என கூறியுள்ளார்.

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
    • 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து, சாம்பியன் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்து தெரிவித்துள்ளது. #BritishAirways #WorldCup
    லண்டன்:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து, குரோசியா மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில், 14-ம் தேதி இரவு நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நிச்சயமாக இங்கிலாந்து விளையாடும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்தை தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு 15-ம் தேதி அணி வருகிறது என்பதை குறிக்கும் வகையில் போர்டிங் பாஸ் வடிவிலான அந்த வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.
    தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள மாணவர்கள் விரைவில் மீட்கப்பட்டுவிட்டால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பைனலை பார்க்க வரலாம் என பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். #ThaiCave #FIFA
    மாஸ்கோ:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். இதனால், அவர்களை முழுவதுமாக மீட்க சில மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 13 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்படுவர் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்காக பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், 13 பேரும் விரைவில் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்த பின்னர், அவர்கள் உடல்நிலை ஒத்துழைத்தால் அவர்கள் அனைவரும் ரஷியாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வரலாம் எனவும் கடிதத்தில் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

    இதேபோல, உலகின் பல முன்னணி கால்பந்து கிளப்புகளின் தலைமை நிர்வாகிகளும் தாய்லாந்து மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் குரல்களை தெரிவித்துள்ளனர். 
    தென்கொரிய பத்திரிகையாளர் ஒருவருக்கு இரண்டு ரஷிய இளம்பெண்கள் முத்தம் கொடுத்துள்ள நிகழ்வு கிண்டல்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. #Russia #WorldCup
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகிறது. இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் செய்தியாளர்கள் ரஷியாவில் குவிந்துள்ளனர். பெண் செய்தியாளர்கள் கேமரா முன்னால் நின்று பேசும் போது, பல இளைஞர்கள் குறும்பாக அவர்களுக்கு முத்தம் கொடுக்கின்றனர்.

    சிலர் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டலின் நாகரீக வடிவம் இது என பலர் பெண்ணிய ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தென்கொரிய தொலைக்காட்சியை சேர்ந்த ஆண் பத்திரிகையாளர் ஒருவர் மாஸ்கோ நகரில் கால்பந்து போட்டி குறித்து கேமரா முன் விவரித்து கொண்டிருந்தார்.



    அப்போது, இரண்டு ரஷிய இளம்பெண்கள் அடுத்தடுத்து அவரது கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த காட்சி நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முத்தம் வாங்கிய அந்த பத்திரிகையாளர் வெட்கத்துடன் சிரித்து கொண்டார்.

    ‘அடிச்சது பார் யோகம்’ என பலர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்க, பலர் பொங்கியுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆண்கள் முத்தம் கொடுத்தால், அது பாலியல் சீண்டல் என்றால், இதுவும் பாலியல் சீண்டலே ஆனால் இதனை யாரும் கண்டிக்க மறுக்கின்றனர் என பலர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
    ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 
    உலகக்கோப்பை போட்டிக்காக தனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் மாற்றுதிறனாளி மற்றும் ஆதரவற்றோரின் விளையாட்டுக்காக பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே தெரிவித்துள்ளார். #KylianMbappe

    கிலியான் மப்பே என்ற பெயர் உலகம் முழுவதும் தற்போது சென்று சேர்ந்துள்ளது. ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நாக்-அவுட் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக பிரான்ஸ் அணி வீரர் மப்பே இருந்துள்ளார்.

    19 வயதான மப்பே அடித்த இரண்டு கோல்களால் அர்ஜென்டினா அணி வெளியேறியது. இந்த போட்டியை அடுத்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த மப்பே, தற்போது இன்னொரு நெகிழ்வான செயலாலும் அனைவராலும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த உலககோப்பையில் விளையாடுவதால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பிரான்ஸில் உள்ள ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விளையாட்டுக்காக செலவிட உள்ளார்.

    இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.2 கோடியை தொடும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்கள வீரராக இருக்கும் மப்பே, பிஎஸ்ஜி கிளப் அணியிலும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கேட்கும் திறன் மற்றும் பார்வை இல்லாத நபர் நண்பரின் உதவியால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தனது நாட்டு அணியின் வெற்றியை கொண்டாடிய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. #FIFA #WorldCup
    போகோடா:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகின்றது. கடந்த வாரம் நடந்த குரூப் போட்டியில் கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், கொலம்பியா அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இந்த போட்டி நடந்த அன்று கொலம்பியா தலைநகரில் நடந்த ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கொலம்பியா அணியின் தீவிர ரசிகரான ஜோஸ் ரிச்சர்ட், 9 வயதில் தனது பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர். போட்டி நடந்த அன்று போகோடா நகரில் உள்ள கிளப்பில் ஆஜரான ஜோஸுக்கு அவரது நண்பர் போட்டியை டிவி.யில் பார்த்து விளக்கியுள்ளார். கால்பந்து மைதானம் போன்ற சிறிய அட்டையை மடிப்பகுதியில் வைத்து, ஜோஸின் இரு கைகளையும் பிடித்து அவரது நண்பர், பந்து போகும் திசையை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.

    பவுல், பெனால்டி, கோல் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் சிறப்பு சங்கேத சைகைகள் மூலம் ஜோஸின் நண்பர் விவரித்துள்ளார். கொலம்பியா அணி கோல் அடித்ததும் உணர்ச்சி பெருக்கால் ஜோஸ் கூச்சலிடும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. வீடியோ கீழே..


    கேரளாவைச் சேர்ந்த வாலிபர் கால்பந்து வீரர் மெஸ்சியிடம் ஆட்டோகிராப் வாங்க தனது சைக்கிளுடன் ரஷ்யா சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #ClifinFrancis
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டிக்காக இந்தியாவிலும் பல கோடி ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். பல கால்பந்து ரசிகர்கள் கால்பந்து அணியின் கொடி அல்லது வீரர்களின் புகைப்படங்களை வீட்டின் சுவரில் பொருத்தி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் கிளிஃபின் பிரான்சிஸ். 28 வயதான இவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கால்பந்து வீரர் மெஸ்சியின் தீவிர ரசிகரான இவர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண வேண்டும் என எண்ணினார். இதையடுத்து, கேரளாவிலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஈரான் வழியாக கப்பலில் ரஷியா சென்றடைந்தார். அங்கிருந்து தனது சைக்கிளில் 600 கி.மீ. பயணம் செய்து போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல உள்ளார்.


    அங்கு நடக்கும் போட்டியை நேரில் பார்த்து விட்டு, மெஸ்சியிடன் தனது சைக்கிளில் ஆட்டோகிராப் வாங்குவதே தனது கனவு என்றார். பிப்ரவரி 23-ம் தேதி தனது பயணத்தை தொடங்கிய பிரான்சிஸ் தற்போது ரஷ்யா சென்றடைந்துள்ளார். தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். விரைவில் போட்டியை நேரில் காண்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். #FIFA2018  #ClifinFrancis

    ×