செய்திகள்

இத்தாலி ஓபனை வென்று மீண்டும் முதல் இடத்தை பிடித்தார் நடால்

Published On 2018-05-21 14:12 GMT   |   Update On 2018-05-21 14:12 GMT
இத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற ரபெல் நடால் ஐந்தாவது முறையாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #Nadal #ItalianOpen
ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபெல் நடால் உலகத் தரவரிசையில் பெடரரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்திருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் காலிறுதியில் டொமினிக் தியெம் இடம் தோல்வியடைந்திருந்தார். இதனால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார்.



நேற்று நடைபெற்ற இத்தாலி ஓபன் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ 6-1, 1-6, 6-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் கடந்த வாரம் இழந்த நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பிடித்தார். நடால் ஐந்து முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

வருகிற 27-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனில் சிறப்பாக விளையாடி பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் நடால் உள்ளார்.
Tags:    

Similar News