search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Italian Open"

    • நாளை நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் மெத்வ தேவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரில் இன்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கோரிக் (குரேஷியா) மோதினர். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் மெத்வ தேவ் (ரஷியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்)-கஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள். 

    அன்ஹெலினா கலினினா - குடர்மெடோவா

    அன்ஹெலினா கலினினா - குடர்மெடோவா

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் குடர்மெடோவா (ரஷியா)-அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), ரைபகினா (கஜ கஸ்தான்)-ஆஸ்டா பென்கோ (லாத்வியா) மோதுகிறார்கள்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-6, 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவில் போர்னா கோரிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரர் போட்டியில் இருந்து விலகினார். இது குறித்து 37 வயதான ரோஜர் பெடரர் கருத்து தெரிவிக்கையில், ‘காலிறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நான் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாததால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து விலகல் முடிவை மேற்கொண்டேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    இன்னொரு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 24-ம் நிலை வீரரான டிகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் (அர்ஜென்டினா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 4-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்திக்க இருந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிகி பெர்டென்ஸ் போட்டியின்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்ததுடன் 500-வது வெற்றியையும் ருசித்தார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    இத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற ரபெல் நடால் ஐந்தாவது முறையாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #Nadal #ItalianOpen
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபெல் நடால் உலகத் தரவரிசையில் பெடரரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்திருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் காலிறுதியில் டொமினிக் தியெம் இடம் தோல்வியடைந்திருந்தார். இதனால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார்.



    நேற்று நடைபெற்ற இத்தாலி ஓபன் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ 6-1, 1-6, 6-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் கடந்த வாரம் இழந்த நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பிடித்தார். நடால் ஐந்து முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

    வருகிற 27-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனில் சிறப்பாக விளையாடி பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் நடால் உள்ளார்.
    இத்தாலி ஓபன் டன்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். #ItalianOPen
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான சிமோனா ஹாலெப், 4-ம் நிலை வீரரான எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

    4-ம் நிலை வீரரான ஸ்விடோலினாவின் ஆக்ரோஷத்திற்கு ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஸ்விடோலினா 6-0, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஆர் பராஹ் - ஜே கேபல் ஜோடி 3-6, 6-4, 10-4 என சவுசா - கர்ரேனோ பஸ்டா ஜோடியை வீழ்த்தியது.



    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் டி ஸ்சூர்ஸ் - ஏ. பார்ட்டி ஜோடி பி ஸ்ட்ரைகோவா- ஹ்லாவாக்கோவா ஜோடியை 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    இத்தாலி ஓபன் டென்னிசில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



    சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.  #RafaelNadal #SimonaHalep
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் சாங் ஷூய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.



    இன்னொரு ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்தனர். முன்னதாக முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் ஷரபோவா 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2½ மணி நேரம் நீடித்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் மார்கோ செஷினாடோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 7 முறை சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் டாமிர் ஜூம்கர்ரை (போஸ்னியா) ஊதித்தள்ளினார்.

    இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தன்னை எதிர்த்த பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். 
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். #Italian Open #SerenaWilliams
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். இந்த தகவலை போட்டி அமைப்பு குழுவினர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

    36 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் களம் திரும்பினார். அந்த மாதத்தில் நடந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோகி ஒசாகாவிடம் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

    ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், இத்தாலி ஓபன் போட்டியில் இருந்தும் விலகி இருப்பதால் அவர் வருகிற 27-ந் தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Italian Open #SerenaWilliams 
    ×