search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rafael nadal"

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் மோதினார்.

    இதில் டி மினார் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நடால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காயத்தால் ஏறக்குறைய ஓராண்டு நடால் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை.
    • மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது என நடால் தெரிவித்தார்.

    மெல்போர்ன்:

    முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் ஏறக்குறைய ஓராண்டு சர்வதேச டென்னிஸ் விளையாடவில்லை. பிரிஸ்பேன் டென்னிஸ் மூலம் மறுபிரவேசம் செய்த அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனிடம் தோற்று வெளியேறினார்.

    இந்த ஆட்டத்தின் போது 37 வயதான நடால் மீண்டும் காயத்தில் சிக்கினார். பரிசோதனையில் தசைநாரில் மிக நுண்ணிய கிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து நடால் கூறுகையில் 'நல்லவேளையாக ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனாலும் தற்போது 5 செட் வரை தாக்குப்பிடித்து விளையாடும் அளவுக்கு தயாராக முடியாது. அதனால் தாயகம் திரும்பி, எனது டாக்டரை கலந்தாலோசித்து சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க உள்ளேன். உற்சாகமான ஆதரவு அளிக்கும் மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது' என்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடால், 2009, 2022-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    • நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதுகிறார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும்.

    ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3-வது முறையாக வென்றார். ஒட்டுமொத்தமாக 4-வது கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால்.
    • நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 28ம் தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகி இருக்கிறார்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய ரபேல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

    36 வயதான ரபேல் நடால் நேற்று அளித்த பேட்டியில், "விஷயங்கள் எப்படி மாறும் என்பது தெரியாது. ஆனால் அடுத்த ஆண்டு எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் தற்போது பயிற்சி பெறுவதற்கு தயாராக இல்லை. நான் மீண்டும் களம் திரும்புவது எப்போது என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை' என்று தெரிவித்தார்.

    ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14 முறை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது.
    • ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார்.

    ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி முதலே காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், இந்தப் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    அவர் ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் காயம் காரணமாக விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் என புகார் கூறியுள்ளார்.
    • பொறுமை இழந்த நடால் எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என கூறுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் எனவும் புகாராக கூறியுள்ளார்.

    இதனால், போட்டி தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அது சர்வதேச பரபரப்பு செய்தியாகவும் மாறியது. போட்டி பாதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பொறுமை இழந்த நடால் தனது டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என நடுவரிடம் கூறுகிறார்.

    தனது பேட் கிடைக்காமல் போகவே, வழியின்றி வேறொரு டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாட சென்றார். அதன்பின் போட்டி தொடர்ந்தது. எனினும், போட்டியில் ஜாக் டிரேப்பருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

    நடால் பயன்படுத்திய பேட்டை, பந்து எடுத்து போடும் சிறுவன் தவறுதலாக எடுத்தது பின்னர் தெரியவந்தது. ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்து எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் நடாலிடம் பேட்டை ஒப்படைத்ததும் குழப்பம் தீர்ந்தது.



    • முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை நடால் வீழ்த்தினார்.
    • ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளார்

    ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை எதிர்கொண்டார். மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இப்போட்டியில் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்று நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோரின் சாதனையுடன் இணைந்துள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்புடன் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளார்.

    • நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது
    • தொடர்ந்து டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பதாக நடால் பேட்டி

    பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர் 22 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். இதற்கிடையே யுனைடெட் கோப்பை கலப்பு அணி போட்டியில் ரபேல் நடால், இங்கிலாந்தின் கேமரூன் நோரியிடம் தோல்வி அடைந்தார். இதனால் நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அதை நடால் மறுத்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, 'நான் என் போட்டியில் தோற்றேன். ஒவ்வொரு முறையும் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது நான் ஓய்வு பெறவேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் என் ஓய்வு பற்றி நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள். ஆனால் ஓய்வு பெறுவது பற்றி இன்னும் என் மனதில் தோன்றவில்லை. அந்த நாள் வரும்போது உங்களிடம் தெரிவிப்பேன். எனவே அதைப்பற்றி கேட்கவேண்டாம். ஏனென்றால் இங்கு நான் டென்னிஸ் விளையாடி கொண்டே இருக்கிறேன்' என்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
    • சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.

    இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.

    போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

    காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.

    ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.
    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்றவரும், 5-வது வரிசையில் உள்ளவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) - மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.

    முதல் செட்டை நடால் 7-6 (10-8) என்ற கணக்கில் போராடி வென்றார். 2-வது செட் 6-6 என்ற சமநிலை இருந்த போது ஸ்வரேவ் காயத்தால் விலகினார். இதனால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அவர் 30-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    2-வது அரை இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே)-2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் கேஸ்பர்ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 20-வது வரிசையில் உள்ள சிலிச்சை தோற்கடித்து முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    23 வயதான கேஸ்பர் ரூட் இதற்கு முன்பு கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்று வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது.

    நார்வேயை சேர்ந்த ஒருவர் கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த பெருமையை கேஸ்பர் ரூட் பெற்றார்.

    இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ரபெல் நடால்-கேஸ்பர் ரூட் மோதுகிறார்கள்.

    களிமண் தரையான பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடுவதில் நடால் வல்லவர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தார். அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2009-ல் 4-வது சுற்றிலும், 2015-ல் கால் இறுதியிலும், 2016-ல் 3-வது ரவுண்டிலும், 2021-ல் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.

    அவருக்கு அடுத்தபடியாக பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) தலா 20 கிராண்ட்சிலாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். நடால் ஒட்டுமொத்தமாக 22-வது பட்டத்தையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14-வது முறையாகவும் நாளை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று 6.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-பதினெட்டாம் வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    நடப்பு சாம்பியன் ஸ்வியா டெக் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். 18 வயதான கோகோ முதல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்திருக்கிறார். 
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 14-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

    முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடந்த 2-வது சுற்றில் ஸ்வெரேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை. இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், குரோசியாவின் மெரின் சிலிச்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என சிலிச் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரூட் 2,3 மற்றும் 4-வது செட்டை 6-4, 6-2, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், காஸ்பர் ரூட்டும் மோத உள்ளனர்.
    ×