search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand Slam tournament"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    • நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதுகிறார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும்.

    ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3-வது முறையாக வென்றார். ஒட்டுமொத்தமாக 4-வது கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றார்.

    ×