செய்திகள்

ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2018-05-08 16:12 GMT   |   Update On 2018-05-08 16:12 GMT
ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 18 வயதான மஹிபால் லாம்ரோர் அறிமுகமானார்.

அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னில் வெளியேறினார்.



ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பட்லர் அதிரடியாக விளையாடி 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.



இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
Tags:    

Similar News