செய்திகள்
2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான்
2019-ம் ஆண்டுக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் லீமான் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் லீமான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. இரண்டு ஆஷஸ் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதாக லீமான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு எனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை, வேறு பயணத்தை தொடர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
தற்போதைய பணியை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் லீமான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. இரண்டு ஆஷஸ் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதாக லீமான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு எனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை, வேறு பயணத்தை தொடர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
தற்போதைய பணியை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.