செய்திகள்

நாளை 3-வது ஆசஷ் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா?

Published On 2017-12-13 07:28 GMT   |   Update On 2017-12-13 07:28 GMT
இங்கிலாந்து அணி ஆசஷ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு நாளைய போட்டியில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
பெர்த்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட ஆசஷ் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டுவில் நடந்த 2-வது டெஸ்டில் 120 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது.

முதல் 2 டெஸ்டில் தோற்ற இங்கிலாந்து அணி நாளைய டெஸ்டிலாவது பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடரை இழக்காமல் இருக்க அந்த அணி வெற்றி பெறுவது அவசியமாகிறது.

முன்னாள் கேப்டன் குக்குக்கு இந்த போட்டி 150-வது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல்லை தொடும் முதல் இங்கிலாந்து வீரர் ஆவார். சர்வதேச அளவில் 8-வது வீரர் ஆவார்.

ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டில் வென்று ஹாட்ரிக் சாதனையுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.
Tags:    

Similar News