செய்திகள்
பெரு கால்பந்து கேப்டனுக்கு ஒரு ஆண்டு தடை
கடந்த அக்டோபர் மாதம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பெரு கால்பந்து அணியின் கேப்டன் பாப்லோ குயரிரோவுக்கு ஓராண்டு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று உத்தரவிட்டது.
பெரு கால்பந்து அணியின் கேப்டன் 33 வயதான பாப்லோ குயரிரோவிடம் கடந்த அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு ஓராண்டு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று உத்தரவிட்டது. அவரது தடை காலம் கடந்த மாதம் 3-ந்தேதியில் இருந்து கணக்கிடப்படும். இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் ரஷியாவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாது. குயரிரோ பெரு அணிக்காக அதிக கோல்கள் (88 ஆட்டத்தில் 33 கோல்) அடித்தவர் ஆவார். 36 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணி உலககோப்பைக்கு தகுதி பெற்றிருப்பது நினைவு கூரத்தக்கது.
இதையடுத்து அவருக்கு ஓராண்டு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று உத்தரவிட்டது. அவரது தடை காலம் கடந்த மாதம் 3-ந்தேதியில் இருந்து கணக்கிடப்படும். இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் ரஷியாவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாது. குயரிரோ பெரு அணிக்காக அதிக கோல்கள் (88 ஆட்டத்தில் 33 கோல்) அடித்தவர் ஆவார். 36 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணி உலககோப்பைக்கு தகுதி பெற்றிருப்பது நினைவு கூரத்தக்கது.