செய்திகள்
டெல்லி கிரிக்கெட் மைதான நுழைவாயிலுக்கு சேவாக் பெயர்
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த விரேந்திர சேவாக்கின் பெயர் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதான நுழைவாயிலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். தனது அதிரடி ஆட்டத்தால் உலக பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தியவர். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இவர் டெல்லியை சேர்ந்தவர். இவரது சாதனைகளை பாராட்டும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானமான பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் 2-வது நுழைவாயிலுக்கு சேவாக் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடக்கிறது. இதற்கு முந்தைய நாள் வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட இருக்கிறது.
1999-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன சேவாக், 251 ஒருநாள் போட்டிகளிலும், 104 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்டில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் குவித்துள்ளார்.
இவர் டெல்லியை சேர்ந்தவர். இவரது சாதனைகளை பாராட்டும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானமான பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் 2-வது நுழைவாயிலுக்கு சேவாக் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடக்கிறது. இதற்கு முந்தைய நாள் வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட இருக்கிறது.
1999-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன சேவாக், 251 ஒருநாள் போட்டிகளிலும், 104 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்டில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் குவித்துள்ளார்.