என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Virender Sehwag"
- சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
- கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.
இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.
மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.
அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
- நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.
- நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம்.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து. ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.
இதையடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இத்தொடரில் அவர் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
இருப்பினும் நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பரிசளித்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் எதிரணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி விளையாடும் நீங்கள், வெற்றிபெற முடியாது என தெரிந்தும் ஏன் உங்களது விக்கெட்டை இழந்தீர்கள் என்பது புரியவில்லை. ஏனெனில் நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.
ஏனெனில் இப்போட்டியில் நீங்கள் முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் சதமடித்திருந்தால் உங்களது ரன் ரேட்டிற்கு அது மிகப்பெரும் உதவியாக அமைந்திருக்கும். அதேபோல் நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம். அப்படி நீங்கள் செய்திருந்தால் அடுத்த போட்டியில் நீங்கள் வலைப்பயிற்சியை தவிர்த்து விட்டு நேரடியாக களமிறங்கி இருக்கலாம்.
இவ்வாறு சேவாக் கூறினார்.
- குல்தீப் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை.
- கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"மிகைப்படுத்துதல் என்று வரும்போது குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ஆன்லைன் பேன்ஸ் கிளப் இல்லை.
அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை. மக்கள் யாரும் இவர்தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்.
என்று சேவாக் கூறினார்.
- 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
- இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கொண்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு பவுலிங் அட்டாக்கை சேவாக் அடித்து நொறுக்கியதை போலவே யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடக் கூடிய வீரராக திகழ்கிறார்.
என்று கூறியுள்ளார்.
இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ரஞ்சி நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர்.
இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
என்று சேவாக் கூறினார்.
- பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
- சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வந்தவர்கள் சச்சின், சேவாக். இருவரும் களத்தில் நின்றால் அனல் பறக்கும். தொடக்க ஆட்டக்காரர்களாக இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர். பவர் பிளேயில் சேவாக் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த காலம் அது.
இரட்டை சதத்தை இன்று பலர் அடித்தாலும் அதனை முதலில் தொடங்கி வைத்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான். முதல் இரட்டை சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் அதிரடி நாயகனாக சேவாக் பிறந்தாளுக்கு சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் ஒருமுறை பொறுமையாக விளையாடும்படி கூறினேன். "சரி" என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, தயவுசெய்து ஒரு சலிப்பான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் விரு.
இவ்வாறு அவர் கூறினார்.
When I once told him to go slow and stay on the crease, he said, "ok" and then smashed the very next ball for four. Happy birthday to the man who likes to do exactly the opposite of what I say.
— Sachin Tendulkar (@sachin_rt) October 20, 2023
So, I am going to say, please have a boring birthday, Viru. ? pic.twitter.com/i45fSXvvtV
- நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
- சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.
சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.
- இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர்.
- எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் ஏந்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். டீம் இந்தியா அல்ல. டீம் பாரத். தனது கருத்து அரசியல் சார்பு சார்ந்தது அல்ல. சமீபத்திய தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகளின் சலுகைகளை நான் நிராகரித்தேன்.
Team India nahin #TeamBharat.
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
This World Cup as we cheer for Kohli , Rohit , Bumrah, Jaddu , may we have Bharat in our hearts and the players wear jersey which has "Bharat" @JayShah . https://t.co/LWQjjTB98Z
ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர்.
என அவர் கூறினார்.
- ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.
- 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் சேவாக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடங்க வீரர் சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரானா நவீத் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
(டெஸ்ட்டில்) சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம். ஆனால், ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம். என்றார். 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 586 ரன்கள் குவித்துள்ளார்.
251 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சேவாக் 8 ஆயிரத்து 273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 19 டி20 கிரிக்கெட்டில் விளையாடிய சேவாக் 394 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரையில் கிட்டத்தட்ட 45 நாட்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் இந்த முறை உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும். அதிலேயும் பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியாவும் 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்த நிலையில், இந்த உலக கோப்பையை விராட் கோலிக்காக இந்திய அணி வெல்ல வேண்டும். ஏனென்றால், அவர் ஒரு சிறந்த வீரர், சிறந்த மனிதர், அவர் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவுகிறார்.
இதே போன்று பாகிஸ்தானிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த வருட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான் என சேவாக் கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைகள் மூலமாக பகிர்வது வழக்கம். அந்த வகையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி குறித்து டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 16-ம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
What a Test Match. One of the best I have seen in recent times. Testcricket is Best Cricket.
— Virender Sehwag (@virendersehwag) June 20, 2023
Was a gutsy decision by England to declare just before close on Day 1, especially considering the weather. But Khawaja was outstanding in both innings and @patcummins30 is the new Mr.… pic.twitter.com/9QqC2hjyzr
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 393 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 386 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 223 ரன்களை குறித்தது.
பின்னர் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது எட்டு விக்கெட்டை இழந்து 282 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டி குறித்து சேவாக் கூறியதாவது:-
என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான். குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு முதல் நாள் முடிவடைவதற்கு சற்று முன்னதாக இங்கிலாந்து டிக்ளேர் அறிவித்தது துணிச்சலான முடிவாகும். ஆனால் கவாஜா இரண்டு இன்னிங்ஸ்களில் அற்புதமாக விளையாடினார். பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல். அவர் போட்டியை முடித்துக் கொடுத்ததும், அழுத்தமான சூழலில் லயன் உடனான சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது என இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு எனக்கு ஞாபகத்தில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்