செய்திகள்
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஈஸ்ட் லண்டன்:
தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 91 ரன்கள் சேர்த்த கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் காயத்தால் பாதியில் வெளியேறினார். பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 40.4 ஓவர்களில் 169 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 91 ரன்கள் சேர்த்த கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் காயத்தால் பாதியில் வெளியேறினார். பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 40.4 ஓவர்களில் 169 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.