செய்திகள்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா நேவால்

Published On 2017-10-20 06:54 GMT   |   Update On 2017-10-20 06:54 GMT
டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய் லாந்தின் ஷின்டா போலுவை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய் லாந்தின் ஷின்டா போலுடன் மோதினார்.

இதில் சாய்னா 22-20, 21-13 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் ஜப்பானின் யமாகுச்சுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் இந்தியாவின் பிரனாய் 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சி சோங் வெய்பை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல் மற்றொரு இந்திய வீரர் முசாந்த் கடாம்பி 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் கொரிய வீரர் ஜன் ஹனக் ஜின்னை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
Tags:    

Similar News