செய்திகள்

கிரெம்லின் கோப்பை டென்னிஸ்: முதல் சுற்றில் பிலிஸ்கோவா, ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

Published On 2017-10-18 10:12 GMT   |   Update On 2017-10-18 10:12 GMT
ரஷியாவில் நடைபெற்றுவரும் கிரெம்லின் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளான பிலிஸ்கோவா, ஷரபோவா ஆகியோர் தோல்வியடைந்தனர்.

மாஸ்கோ:

கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ரஷியாவின் மாஸ்கோ நகரில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது, இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா, 8-ம் நிலை வீராங்கனையான ஸ்லொவேகியாவின் மக்டோலினா ரைபரிகோவாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஈடுகொடுத்து விளையாடினர். இருப்பினும் ரைபரிகோவா டை பிரேக் முறையில் 7-6 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இராண்டாவது செட்டும் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் 6-4 என்ற செட் கணக்கில் ரைபரிகோவா இந்த செட்டையும் கைப்பற்றினார். இதன்மூலம் ஷரபோவா இந்த தொடரைவிட்டு வெளியேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, ஆறாம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் தாரியா கவுரிலோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-4, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் கவுரிலோவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News