செய்திகள்

சர்வதேச டேபிள் டென்னிஸ்: சென்னை வீராங்கனை ஷெலீனா அபாரம்

Published On 2017-10-14 10:04 GMT   |   Update On 2017-10-14 10:04 GMT
சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை வீராங்கனை ஷெலீனா வெற்றி பெற்றார்.

சென்னை:

சர்வதேச டேபிள் டென்னிஸ் ரேங்கிங் போட்டியின் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் பந்தயம் எகிப்தில் நடந்தது.

இதன் அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 3-2 என்ற கணக்கில் எகிப்து ‘ஏ’ அணியை வீழ்த்தியது.

இந்திய அணியின் வெற்றிக்கு சென்னை வீராங்கனை ஷெலீனா செல்வக்குமார் முக்கிய பங்கு வகித்தார். அவர் அபாரமாக விளையாடி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

17 வயதான ஷெலீனா 11-8, 13-11, 11-13, 11-7 என்ற கணக்கில் சாரா அபோஸ் டாவையும், 12-10, 4-11, 11-8, 11-9 என்ற கணக்கில் மரியம் அல்ஹோதாபியையும் தோற்கடித்தார்.

இதேபோல் அரை இறுதியிலும் ஷெலீனா சிறப்பாக செயல்பட்டார். முதல் ஆட்டத்தில் 11-8, 11-3, 6-11, 11-7 என்ற கணக்கில் தாகாவையும் (எகிப்து), 2-வது ஆட்டத்தில் 11-5, 12-14, 11-9, 11-6 என்ற கணக்கில் அபீர் சலாகையும் (துனிசியா) வீழ்த்தினார்.

Tags:    

Similar News