செய்திகள்

டெல்லி அணி கேப்டன் பதவியில் இருந்து காம்பீர் விலகல்: இசாந்த் ஷர்மா கேப்டன்

Published On 2017-09-23 10:40 GMT   |   Update On 2017-09-23 10:40 GMT
ரஞ்சி டிராபி தொடருக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார். இஷாந்த் ஷர்மா கேப்டனாக நியமனம்.
இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரராக இருந்தவர் கவுதம் காம்பீர். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆனால் ரஞ்சி டிராபிக்கான டெல்லி அணிக்கும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கேப்டனாக இருந்து வந்தார்.

ரஞ்சி டிராபி 2017-18 சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டது. கவுதம் காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.



கடந்த சீசனில் காம்பீர் தலைமையிலான டெல்லி அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. மேலும் பயிற்சியாளருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News