search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஷாந்த் ஷர்மா"

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சுக்குழு 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் இந்தியா பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அஸ்வினைத் தவிர மற்ற நான்கு பேரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.



    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். அவரது பந்து ஓரளவிற்கு டர்ன் ஆகியது. இதனால் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    துரதிருஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் 2-வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீச்சாளர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதனால் அஸ்வின் பந்து வீசவில்லை. ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



    இதனால் முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்களே 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ஒரே டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள்.



    1996-ல் டர்பனில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள். 1997-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும், 2001-ல் கண்டியில் 18 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் 84 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி (103), புஜாரா (72), ஹர்திக் பாண்டியா (52 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா ஒட்டுமொத்தமாக 520 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள்.



    5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 19 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    இங்கிலாந்து வீரர் தாவித் மலனை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்னில் சுருண்டது.

    13 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னி்ங்சை தொடங்கியது. இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.



    இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இங்கிலாந்து 70 ரன்கள் எடுத்திருக்கும்போது தாவித் மலன் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஆக்ரோஷமாக தாவித் மலன் அருகில் சென்று சைகை காட்டினார்.



    இது ஐசிசி-யின் விதிமுறைக்கு மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமும், தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இஷாந்த் ஷர்மா அபராதத்தை ஒத்துக் கொண்டதால் விசாரணையின்றி இந்த பிரச்சனை அத்துடன் முடித்து வைக்கப்பட்டது,
    இசாந்த் ஷர்மா 5 விக்கெட் அள்ளியதால் 180 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பட்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. பட்லர் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். முதல் பந்தில் சாம் குர்ரான் ஒரு எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    இங்கிலாந்து 87 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது. இதனால் 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாம் குர்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நேர்த்தியாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். இஷாந்த் சர்மா பந்தில் இமாலய சிக்சர் விளாசி 54 பந்தில் அரைசதம் அடித்தார்.



    இவரது ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. அந்த வேளையில் இஷாந்த் சர்மா பந்தில் பிராட் ஆட்டமிழந்தார். பிராட்டை வீழ்த்தி ஐந்து விக்கெட்டை பதிவு செய்தார் இஷாந்த் ஷர்மா. அடுத்த ஓவரில் குர்ரான் 65 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 13 ரன்கள் அதிகம் பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    2-வது இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    அஸ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #ENGvIND #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.



    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    தற்போது வரை இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 50 ரன்னுக்குள் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கிவிட்டால், இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    ×