செய்திகள்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் சாய்னா நேவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.
கிளாஸ்கோ:
23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாய்னா நேவால், 75-வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாக்யூடை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், சாய்னா நேவால் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் சப்ரினாவை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டியில் வென்றதன்மூலம், சாய்னா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
நேற்று, இரண்டாம் சுற்றில் நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.