செய்திகள்

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - அரியானா அணிகள் இன்று மோதல்

Published On 2017-08-16 07:24 GMT   |   Update On 2017-08-16 07:24 GMT
புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அகமதாபாத், ஆக. 16-

5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் கட்ட ஆட்டம் ஐதராபாத்திலும், 2-வது கட்ட போட்டிகள் நாக்பூரிலும் நடைபெற்றன.

தற்போது 3-வது கட்ட போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் 27-32 என்ற கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பெங்களூர் புல்சிடம் 31-32 என்ற கணக்கிலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் 29-24 என்ற கணக்கில் பெங்களூர் புல்சை வீழ்த்தியது.

‘பி’ பிரிவில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி 3-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள அரியானா ஸ்டீலர்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளியுடன் இருக்கிறது. அரியானா அணி 9 புள்ளியுடன் இருக்கிறது.

அந்த அணி மும்பையை 29-28 என்ற கணக்கில் வென்று இருந்தது. குஜராத்துடன் மோதிய ஆட்டம் 27-27 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குஜராத்திடம் 20-32 என்ற கணக்கில் தோற்றும் இருந்தது.

தமிழ் தலைவாஸ் அணியில் கே.பிரபஞ்சன், டாங், கேப்டன் அஜய் தாகூர், அமித் ஹூடா, சோமபீர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அரியானா அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணியை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்க்கன் ஜெய்ன்ட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகின்றன.

Tags:    

Similar News