செய்திகள்
தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 54 பேர்
லக்னோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கவுள்ள பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் 54 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை :
15-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை லக்னோவில் நடக்கிறது. இதற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் அணியில் குரு ஜவஹர், ஜோஷூவா செல்லதுரை, சங்கமித்ரன், ஆகாஷ் பாபு, நிதின், தரண், சந்தோஷ்குமார் உள்பட 25 பேரும், பெண்கள் பிரிவில் ரேவதி, ராமலட்சுமி, ஷாலினி, சுபா, மரிய ராசாத்தி, ஆர்த்தி, பிரியா, கவுதமி, சந்தியா உள்பட 29 பேரும் தேர்வாகியுள்ளனர்.
15-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை லக்னோவில் நடக்கிறது. இதற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் அணியில் குரு ஜவஹர், ஜோஷூவா செல்லதுரை, சங்கமித்ரன், ஆகாஷ் பாபு, நிதின், தரண், சந்தோஷ்குமார் உள்பட 25 பேரும், பெண்கள் பிரிவில் ரேவதி, ராமலட்சுமி, ஷாலினி, சுபா, மரிய ராசாத்தி, ஆர்த்தி, பிரியா, கவுதமி, சந்தியா உள்பட 29 பேரும் தேர்வாகியுள்ளனர்.