செய்திகள்

ஐ.பி.எல். ‘டைட்டில்’ உரிமம் பெற நிறுவனங்களுக்கு அழைப்பு

Published On 2017-05-22 03:24 GMT   |   Update On 2017-05-22 03:24 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘டைட்டில்’ ஸ்பான்சர்ஷிப் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘டைட்டில்’ ஸ்பான்சர்ஷிப் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் வருகிற 31-ந்தேதி வெளியிடப்படும். டெண்டர் படிவத்தில் அதிக தொகையை குறிப்பிடும் நிறுவனம் ‘டைட்டில்’ ஸ்பான்சராக தேர்வு செய்யப்படும்.

இதே போல் ஐ.பி.எல். போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும் சோனி நிறுவனத்துடனான 10 ஆண்டு கால ஒப்பந்தமும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் ஜூலை 17-ந்தேதி தொடங்கும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News